உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே பாக்கெட் சாராயம் விற்ற வாலிபர் கைது
- வெங்கடேசன் வளையாம்பட்டு தென்மங்கலம் சாலை ஓரமாக பாக்கெட் சாராயத்தை திருட்டுத்தனமாக விற்றார்.
- வெங்கடேசனை கைது செய்து அவரிடம் இருந்து 5000 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே வளையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 29) இவர் வளையாம்பட்டு தென்மங்கலம் சாலை ஓரமாக பாக்கெட் சாராயத்தை திருட்டுத்தனமாக விற்றார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார் வெங்கடேசனை கையும் காலமாக பிடித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5000 பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.