உள்ளூர் செய்திகள்

மதுபான பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

Published On 2022-09-05 07:29 GMT   |   Update On 2022-09-05 07:29 GMT
பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் மதுபானம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் கள்ளிப்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (37) என்பவர், சாக்கு பையில் மது பாட்டில்களை கொண்டு வந்து,தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள அரசு மதுக்கடை அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பங்களாப்புதூர் போலீசார் அண்ணாதுரையிடம் இருந்து 24 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News