உள்ளூர் செய்திகள்

கடைக்கு செல்வதாக கூறி சென்ற இளம்பெண் மாயம்

Published On 2023-08-21 15:43 IST   |   Update On 2023-08-21 15:43:00 IST
  • நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற ஜோதி பின்னர் வீடு திரும்பவில்லை.
  • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பெரியனூர் புளிந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வசந்த குமார். இவரது மனைவி ஜோதி (வயது22). இவர்க ளுக்கு திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் 2 ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற ஜோதி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்க ளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News