உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே இளம் பெண் தற்கொலை

Published On 2022-09-26 06:59 GMT   |   Update On 2022-09-26 06:59 GMT
  • காவ்யா தனது தாய் கண்டித்ததால் மனமுடைந்து விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
  • மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா (20). இவர் வீட்டில் வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த காவ்யா விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News