உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லாததால் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

Published On 2023-11-09 06:39 GMT   |   Update On 2023-11-09 08:22 GMT
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
  • தற்கொலை சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சரிதா(வயது35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வேதனை அடைந்த சரிதா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News