உள்ளூர் செய்திகள்

நெல்லையில் தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2022-08-11 09:47 GMT   |   Update On 2022-08-11 09:47 GMT
  • இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை:

பாளை கே.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ(வயது28). இவர் இன்று மகராஜநகர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் பிரிட்டோ மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரிட்டோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News