உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனியில் வாலிபர் மர்மச்சாவு

Published On 2022-09-19 08:01 GMT   |   Update On 2022-09-19 08:01 GMT
தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.

தேனி:

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது42). இவர் தேனி-பெரியகுளம் சாலையில் ரத்தினம் நகர் பஸ் நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அல்லிநகரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னச்சாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News