உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2022-06-23 08:49 GMT   |   Update On 2022-06-23 08:49 GMT
  • உப்பள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விளக்கை சரிபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார்.
  • ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆறுமுகநேரி:

குரும்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 51). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இவரது மூத்த மகனான முத்துவேல் சுடலையாண்டி (21) டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆறுமுகநேரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் உப்பள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விளக்கை சரிபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். உடனடியாக அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முத்துவேல் சுடலையாண்டி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News