என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youngman Death"
- வேலைக்கு சேர்ந்த 2 நாளில் சோகம்
- 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார்.
கோவை
ஒடிசாவை சேர்ந்தவர் பஷந்த்நாயக் (வயது 19). இவர் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் அங்கு அவரால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை.
பின்னர் தனது அண்ணனுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அங்கு சிறிய சிறிய வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று உணவகத்தில் கிரைண்டரில் அரிசி அரைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பசந்த்நாயக் மயங்கி கிரைண்டர் வயர் மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தார்கள் ஓடி வந்தனர். பின்னர் பசந்த்நாயக்கை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து வடவள்ளி ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஷந்த்நாயக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உப்பள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விளக்கை சரிபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார்.
- ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
குரும்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 51). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இவரது மூத்த மகனான முத்துவேல் சுடலையாண்டி (21) டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆறுமுகநேரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் உப்பள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் விளக்கை சரிபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். உடனடியாக அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முத்துவேல் சுடலையாண்டி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்