உள்ளூர் செய்திகள்

பழவூர் அருகே காதலிப்பதாக கூறி சிறுமியை அடித்து உதைத்த வாலிபர் கைது

Published On 2023-01-20 09:05 GMT   |   Update On 2023-01-20 09:05 GMT
  • மாறான்குளத்தை சேர்ந்த மதன் பள்ளி சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • காட்டுப்பகுதிக்கு வேலைக்கு சென்றவர்கள் மயங்கி கிடந்த சிறுமி மீட்டனர்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பழவூர் அடுத்த மாறான்குளத்தை சேர்ந்தவர் மதன் (வயது 20). கூலித் தொழிலாளி. மதன் பள்ளி சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல்

சம்பவத்தன்று சிறுமியை மதன் அந்தப்பகுதியில் உள்ள காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சிறுமி கொண்டு வந்த பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிறுமி முகத்தில் தாக்கியும், அடித்து உதைத்தாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாத மதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். காட்டுப்பகுதிக்கு வேலைக்கு சென்றவர்கள் அந்த சிறுமி மயங்கி கிடப்பதை கண்டு அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து பழவூர் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News