உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே இளம் பெண் மாயம்

Published On 2022-08-28 08:20 GMT   |   Update On 2022-08-28 08:20 GMT
  • திருவெண்ணைநல்லூர் அருகே இளம் பெண் மாயமானார்.
  • புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே அருள் குறுக்கே பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சத்தியா (வயது 19) இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சடைந்த வீட்டில் உள்ளவர்கள் சத்யாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலு திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து சத்யாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News