உள்ளூர் செய்திகள்
- இளவேனில் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புவனகிரி அருகே கீரப்பாளையம் அடுத்த மேல வன்னியர் மேலத்தெரு இளங்கோவன். விவசாயி. இவரது மகள் இளவேனில் (வயது 23) கல்லூரி முடித்து விட்டு புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்த அவருடைய தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளவேனிலை தேடி வருகின்றனர்.