உள்ளூர் செய்திகள்

கோவையில் நகைக்கடையில் கைவரிசை காட்டிய இளம்பெண் கைது

Published On 2023-05-11 09:07 GMT   |   Update On 2023-05-11 09:07 GMT
  • கீர்த்தி இரவு 8 மணி அளவில் 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.
  • கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு சுப்பேகவுண்டன் புதூரை சேர்ந்த கீர்த்தி (19) என்ற இளம்பெண் வேலைக்கு சேர்ந்தார். இரவு 8 மணி அளவில் அவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.

இது குறித்து ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கீர்த்தியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் மூலம் வங்கியில் திருடிய நகையை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் பெற்றதாக கூறினார்.

போலீசார் அவரிடம் இருந்து பணத்தை பெற்று நகையை மீட்டு ஆகாஷிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News