புதுச்சேரி

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக சுற்றுலா தின வினாடி-வினா போட்டி

Published On 2023-09-27 09:32 GMT   |   Update On 2023-09-27 09:51 GMT
  • உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
  • 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது.

புதுச்சேரி:

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து, உலக சுற்றுலா தின விழாவையொட்டி, காரைக்காலில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்டத்தில் கபடி போட்டி, பீச் வாலிபால் போட்டி, மணல் சிற்பம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதன் தொடக்க நிகழ்வாக, நேற்று காலை, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், 11 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற சுற்றுலாத்துறை சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் வினாடி- வினாடி நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, 11 கல்லூரிகளைச் சேர்ந்த ஆண்களுக்கான வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரேகா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News