உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

Published On 2023-11-13 10:04 GMT   |   Update On 2023-11-13 10:04 GMT
  • வேலி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷ பாம்பு கடித்தது.
  • டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பொன்மான்மேய்ந்தநல்லூர்ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 38) கூலிதொழிலாளி இவர் வடக்கு மாங்குடி பகுதியில் வேலி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜாவை விஷ பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News