உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி சாவு

Published On 2023-08-07 16:00 IST   |   Update On 2023-08-07 16:00:00 IST
  • கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது40). தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக குமார் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News