உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

செம்பட்டி அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலி

Published On 2023-03-27 11:00 IST   |   Update On 2023-03-27 11:00:00 IST
  • பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்தி லேயே பலியானார்.
  • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செம்பட்டி:

மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் கோபால் (வயது48). இவர் தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் கன்னிவாடியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார்.

செம்பட்டி அருகே பழனி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கோபால் சம்பவ இடத்தி லேயே பலியானார்.

காயங்களுடன் மீட்க ப்பட்ட மணிகண்டபிரபு திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Tags:    

Similar News