உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் அருகே தொழிலாளியை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு

Published On 2023-09-07 13:23 IST   |   Update On 2023-09-07 13:23:00 IST
  • மர்ம வாலிபர் கோபியை வழிமறித்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
  • கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

கோயம்பேடு, சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிமணி தொழிலாளி. இவர் நேற்று இரவு கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள "ஏ" சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் கோபியை வழிமறித்து பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.

ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் கிடந்த பீர் பாட்டிலால் கோபியை தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News