உள்ளூர் செய்திகள்
- வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி முன்னிலையில் பேரணி நடந்தது.
- 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்
வால்பாறை,
நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை கடைபிடித்து வருகிறார்கள். வால்பாறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
அமைப்பு சார்பில் ஜூலியா ஜெரோசா மற்றும் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வால்பாறை நகரமன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி முன்னிலையில் பேரணி நடந்தது. பேரணியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் அமைப்பினர் ராதா மற்றும் ஸ்ரீவித்யா திசையாலினி, தமிழழகி, சசிகலா ஒருங்கிணைந்தார்கள். ஊர்வலம் நகராட்சி அலுவலகம் வரை திரும்பியது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் எனவும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.