உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே பெண் மாயம்

Published On 2022-08-12 09:09 GMT   |   Update On 2022-08-12 09:09 GMT
  • சொர்ணலெட்சுமிக்கும், சரவணமுருகனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
  • சரவணமுருகன் பல்வேறு இடங்களில் தேடியும் சொர்ணலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சொர்ணலெட்சுமி (வயது34). இவருக்கும் வெள்ளாங்குழியை சேர்ந்த சரவணமுருகனுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் கடந்த மாதம் இவரது தந்தை அருணாசலம் இறந்தார். இவரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள சொர்ணலெட்சுமி சேதுராயபுரத்திற்கு வந்தார். அதன் பின்னர் வெள்ளாங்குழிக்கு புறப்பட்டு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வெள்ளாங்குழி செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

இதையடுத்து அவரது கணவர் சரவணமுருகன் பல்வேறு இடங்களில் தேடியும் சொர்ணலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது சகோதரர் நம்பிராஜன் (29) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சொர்ணலெட்சுமியை தேடி வருகிறார்.

Tags:    

Similar News