உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் விபத்தில் பெண் பலி

Published On 2022-12-09 08:50 GMT   |   Update On 2022-12-09 08:50 GMT
  • கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர்.
  • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மனைவி பரிதா பானு (வயது 47). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் பரிதா பானு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை அவரது உறவினர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிதா பானுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News