உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் பெண் கொன்று புதைப்பு? கணவரிடம் போலீசார் விசாரணை

Published On 2023-11-13 14:02 IST   |   Update On 2023-11-13 14:02:00 IST
  • நள்ளிரவு ஆராயி மர்மமான முறையில் இறந்தார்.
  • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை:

ஆந்திரா மாநிலம் தருமபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(45).

பேப்பர் உள்ளிட்ட காகிதங்களை பொறுக்கி தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி லட்சுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டைக்கு வந்த வெங்கடேசுக்கு ஆதரவின்றி தர்மம் எடுத்து வந்த ஆராயி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே நேற்று நள்ளிரவு ஆராயி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் டி.வி.எஸ். கார்னரில் இருந்து ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ள புதிதாக கட்டப்பட்டு நிறைவு பெறாமல் உள்ள கோவில் அருகே புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வெங்கடேஷ் ஆராயியை கொன்று புதைத்தாரா? அல்லது தற்செயலாக இறந்ததால் புதைத்து ள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News