உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட சுபாஷினி.

வேப்பூர் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-12-02 14:23 IST   |   Update On 2022-12-02 14:23:00 IST
  • வேப்பூர் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  • இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா விசாரணை நடத்தினார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே போ. கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் ஆதரவற்ற பெண் குழந்தையை எடுத்து சுபாஷினி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுபாஷி னிக்கும் தனது மகன் கோபிநாத்திற்கும் திருமணம் செய்து வைத்தார். இந்நிலை யில் சுபாஷினி கடுமை யான வயிற்று வலி காரண மாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா விசாரணை நடத்தி னார். அப்போது சுபாஷினி யின் அத்தை பரிமளா சுபாஷினி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதால், இறந்து போன சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வேப்பூா் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் சார் ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News