உள்ளூர் செய்திகள்
பைக்கில் தவறி விழுந்த பெண் சாவு
- கம்பைநல்லூர் அடுத்த பூமசமுத்திரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
- வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்ைபநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி குஞ்சம்மாள் (வயது52). இவர் நேற்று உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கம்பைநல்லூர் அடுத்த பூமசமுத்திரம் பகுதியில் வந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனை பார்த்து பிரேக் போட்டதால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.