உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே திருமணமாகி 3 வருடத்தில் தீயில் கருகி பெண் சாவு

Published On 2022-06-24 10:19 GMT   |   Update On 2022-06-24 10:19 GMT
  • கடலூர் அருகே திருமணமாகி 3 வருடத்தில் தீயில் கருகி பெண் இறந்தார்.
  • அஸ்வினி தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.

கடலூர்:

கடலூர் அருகே அழகியநத்தம் சேர்ந்தவர் திவ்யகுமார். அவரது மனைவி அஸ்வினி (வயது 22). இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணமாகி 7 மாதத்தில் அனுஸ்ரீ பெண் குழந்தை இருந்து வருகின்றது.  சம்பவத்தன்று அஸ்வினி வீட்டில் விளக்கு ஏற்றி சாமிக்கு பூ போட்டு கொண்டிருந்தபோது நைட்டியில் திடீரென்று தீப்பிடித்த காரணத்தினால் அஸ்வினி அலறி கதறி துடித்து உள்ளார்‌. சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் தீயை அணைத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்‌. பின்னர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அஸ்வினி தனது தந்தை வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அஸ்வினியை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்‌. இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 வருடத்திற்குள் அஸ்வினி இறந்ததால் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News