உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொருங்கி இருக்கும் காட்சி.

கார் மீது தனியார் பேருந்து மோதி பெண் பலி

Published On 2023-08-02 15:29 IST   |   Update On 2023-08-02 15:29:00 IST
  • அரசு பள்ளி எதிரே வந்த போது பின்னால் வந்த தனியார் ேபருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
  • இதில் கார் பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த 5 பேர் காயமடைந்தனர்.

காவேரிப்பட்டணம்,

கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி பவித்ரா. இவர்கள் இருவர் மற்றும் உறவினர்கள் 5 பேருடன் பெங்களூரில் இருந்து காரில் காஞ்சிபுரத்திற்கு புடவை எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி அருகே தேசிய ெநடுஞ்சாலை யில் காவேரிப்பட்டணம், திம்மாபுரம் அருகே அரசு பள்ளி எதிரே வந்த போது பின்னால் வந்த தனியார் ேபருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

இதில் கார் பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியிலேயே பவித்ரா உயிரிழந்தார்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News