உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
- இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட பிரித்திதேவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஓம்சாந்திநகரை சேர்ந்தவர் பிரித்திதேவி (வயது27), ரத்தோர் சாம்ஷா ஆகிய இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரித்திதேவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.