உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு

Published On 2023-09-08 10:15 GMT   |   Update On 2023-09-08 10:15 GMT
  • பெண்ணின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.
  • அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம். இவருடைய கணவர் ஷாகுல் ஹமீது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் இவர்கள் மூன்று பேரும் திருவாரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்று விட்டு யாஸ்மின் பேகம் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உள்ளே மறைந்து இருந்து ஜாஸ்மின் பேகம் உள்ளே நுழைந்ததும் அவரின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.

இதில் மயக்கம் அடைந்து ஜாஸ்மின் பேகம் சம்பவ இடத்தில் கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவர் கழுத்து மற்றும் காலில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

ஜாஸ்மின் பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News