உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது

Published On 2023-05-25 08:07 GMT   |   Update On 2023-05-25 08:07 GMT
  • மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
  • புஷ்பா வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம மரக்காணத்தில்கரி பாளையம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன். இவருடைய மனைவி புஷ்பா ( வயது 52). இவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் கள்ளச்சாராய விற்பது மரக்காணம் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்தத் தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் கரி பாளையம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் புஷ்பா தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து அவர் வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர். அவரை சாராய வழக்கில் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News