உள்ளூர் செய்திகள்

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ராணுவ வீரர்-குடும்பத்தினர் மீது புகார்

Published On 2022-11-23 15:20 IST   |   Update On 2022-11-23 15:20:00 IST
  • பானுபிரியா என்ற பெண்ணை ஹரிகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
  • புகாரின்பேரில் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகேயுள்ள நாகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40).இவரது கணவர் ஹரிகிரு ஷ்ணன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு சுமதி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு தெரியாமல் பானுபிரியா என்ற பெண்ணை ஹரிகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி அறிந்த சுமதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் ஹரிகிருஷ்ணன், அவரது பெற்றோர் வைரப்பன்,ஜோதி,2-வது மனைவி பானுபிரியா மற்றும் உறவினர்கள் ராஜன்,அமுதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின்பேரில் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News