உள்ளூர் செய்திகள்
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ராணுவ வீரர்-குடும்பத்தினர் மீது புகார்
- பானுபிரியா என்ற பெண்ணை ஹரிகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- புகாரின்பேரில் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள நாகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40).இவரது கணவர் ஹரிகிரு ஷ்ணன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு சுமதி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு தெரியாமல் பானுபிரியா என்ற பெண்ணை ஹரிகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி அறிந்த சுமதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் ஹரிகிருஷ்ணன், அவரது பெற்றோர் வைரப்பன்,ஜோதி,2-வது மனைவி பானுபிரியா மற்றும் உறவினர்கள் ராஜன்,அமுதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.