உள்ளூர் செய்திகள்

செயல்படாமல் உள்ள வாடி கட்டிடம்.

கால்நடைகளை அடைக்க மீண்டும் வாடி அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-10-08 09:18 GMT   |   Update On 2022-10-08 09:18 GMT
  • அண்மை காலங்களாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
  • விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து விழிதியூரில் கொண்டு போய் விடுகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளைநிலங்களில் சம்பா, தாளடி என இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த விளைநிலங்களை கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருக்க 10 ஆண்டுகளுக்கு முன்னர் தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டு பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அடைக்க பெருமாள் மேல வீதியில் வாடி இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வாடிகள் இயக்கப்படாமல் உள்ளது.

இதனால் அண்மை காலங்களாக ஆடு, மாடுகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

அவ்வாறு சேதப்படுத்தும் கால்நடைகளை அடைக்க வாடிகள் திட்டச்சேரி பகுதியில் இல்லாமல் உள்ளது.

இதனால் விவசாயிகள் பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகளை பிடித்து அண்டை மாநிலமான காரைக்கால் மாவட்டம் விழிதியூரில் கொண்டு போய் விடுகின்றனர்.

எனவே கால்நடைகளை கட்டுப்படுத்த திட்டச்சேரி பெருமாள் மேலவீதியில் உள்ள இடத்தில் மீண்டும் புதிய வாடி கட்டிடம் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News