உள்ளூர் செய்திகள்

ராராமுத்திரகோட்டையில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறக்கப்படுமா?

Published On 2023-09-03 09:51 GMT   |   Update On 2023-09-03 09:51 GMT
  • அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
  • தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் 11 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்போது போதுமான கட்டிட வசதி அடிப்படை வசதி இல்லாத குடிசை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

அங்கன்வாடி குழந்தைகளின் நலன் கருதி உடனடியாக புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News