உள்ளூர் செய்திகள்

திருக்கழுகுன்றத்தில் கணவன்-மனைவி தகராறு- மனைவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-03-04 18:16 IST   |   Update On 2023-03-04 18:16:00 IST
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் மங்கலம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மனைவி நிஷா, வயது.33, கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளார். திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News