உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவி ஒருவருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கிய காட்சி.




உடன்குடியில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-07-16 09:27 GMT   |   Update On 2022-07-16 09:27 GMT
  • உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்றஅறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா உடன்குடிமேல பஜாரில்நேற்று கொண்டாடப்பட்டது.
  • சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார்.

உடன்குடி:

உடன்குடி சுற்றுவட்டார காமராஜர் நற்பணி மன்றஅறக்கட்டளை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா உடன்குடிமேல பஜாரில்நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் 2000 பேருக்கு சமபந்தி பொது விரு ந்து அன்னதான நடந்தது. இரவு 7மணிக்கும் நடந்த விழாவிற்கு இந்த அமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் நடராஜன், சிவசுப்பிரமணியன், விஜயகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவர் சந்தையடியூர் மால்ராேஜஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காமராஜரின் வாழ்கை வரலாறு பற்றி விரிவாக பேசினார்.

தொடர்ந்து 10 வகுப்பு மற்றும் 12 ம்வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் ஊக்கபரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடைகள், சேலைகள் உட்பட சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவரணி மாநில துணை தலைவர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங், கிறிஸ்தியா நகரம்ஜான்பாஸ்கர்,

உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சலீம், மற்றும்ஆர்.எஸ்.யூ.சதீஸ், பரமன்குறிச்சி இளங்கோ, மதன்ராஜ், மகாவிஷ்ணு, ரவிராஜா, சிராஜுதீன், வெற்றிவேல், மணப்பாடு ஜெயபிரகாஷ், ஜெயராமன் உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் கவுன்சிலர்கள், உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் உட்பட இந்த அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சி சேர்ந்த பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு காமராஜரின் புகழ் பற்றி பேசினர்.

இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News