உள்ளூர் செய்திகள்

விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி. 

கயத்தாறு பேரூராட்சி பகுதியில் தி.மு.க. சார்பில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-06-05 08:54 GMT   |   Update On 2023-06-05 08:54 GMT
  • விழாவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க. வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  • தொடர்ந்து தி.மு.க. சார்பில் பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உட்பட 100 பேருக்கு அரிசி ,பருப்பு வகைகள் வழங்கினார்.

கயத்தாறு:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலை மையில் நடைபெற்றது. விழாவில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுப்பு லட்சுமி ராஜதுரை, கட்சி பிரமுகர் லயன்ஸ் பேட்டை மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் சபுராசலீமா, நயினார்பாண்டியன், மாரியம்மாள், ஆதிலட்சுமி, கோகிலா, தேவி, முன்னாள் நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் சந்தானம், பரமசிவம், சேக்தாவூது, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனை வருக்கும் லட்டு வழங்கினர். பின்னர் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க. சார்பில் பேரூராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், சுகாதார சிப்பந்திகள், பிளம்பர்கள், சுகாதார மருந்தாளுனர்கள் 100 பேருக்கு அரிசி ,பருப்பு வகைகள் வழங்கினார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் செய்திருந்தார்.

Tags:    

Similar News