உள்ளூர் செய்திகள்

வாராந்திர ரெயில்கள் பேராவூரணியில் நின்று செல்ல வேண்டும்

Published On 2023-04-10 14:34 IST   |   Update On 2023-04-10 14:34:00 IST
  • ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் இயங்க இருக்கிறது.
  • பேராவூரணியில் 2 நிமிடங்கள் வாராந்திர ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.

பேராவூரணி:

பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 8-ந்தேதி முதல் வாராந்திர ரெயிலாகவும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க இருக்கும் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் (வண்டி எண்: 20683), செங்கோட்டை - தாம்பரம் (வண்டி எண்:20684) மற்றும் ஏற்கனவே பேராவூரணி வழியில் இயங்கி கொண்டிருக்கும் செகந்திராபாத் - ராமநாதபுரம் (வண்டி எண்: 07696), ராமநாதபுரம் - செகந்திராபாத் (வண்டி எண்:07695) வாராந்திர ரெயில்கள் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி இடையில் உள்ள பேராவூரணியில் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News