search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Min"

    • ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் இயங்க இருக்கிறது.
    • பேராவூரணியில் 2 நிமிடங்கள் வாராந்திர ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கம் சார்பில் தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 8-ந்தேதி முதல் வாராந்திர ரெயிலாகவும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் இயங்க இருக்கும் தாம்பரம் - செங்கோட்டை ரெயில் (வண்டி எண்: 20683), செங்கோட்டை - தாம்பரம் (வண்டி எண்:20684) மற்றும் ஏற்கனவே பேராவூரணி வழியில் இயங்கி கொண்டிருக்கும் செகந்திராபாத் - ராமநாதபுரம் (வண்டி எண்: 07696), ராமநாதபுரம் - செகந்திராபாத் (வண்டி எண்:07695) வாராந்திர ரெயில்கள் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி இடையில் உள்ள பேராவூரணியில் 2 நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×