உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருேக லாரி மோதி முதியவர் பலி

Published On 2022-08-02 07:29 GMT   |   Update On 2022-08-02 07:29 GMT
  • விருத்தாசலம் அருேக முதியவர் ஒருவர் லாரி மோதி பலியானார்.
  • வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கடலூர்:

விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(வயது 55). இவர் நேற்று இரவு 7:45 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து மெயின் ரோட்டைக் கடந்து போகும் போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற சரக்கு லாரி மோதி பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News