உள்ளூர் செய்திகள்
எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா
- எஸ்.பி.கே. பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
- விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
அருப்புக்கோட்டை
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே. பள்ளிகளில் உள்ள விநாயகருக்கு பூஜை செய்து படையல் படைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விநாயகருக்கு பூஜைகள் செய்து உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமையில் பள்ளிச் செயலாளர் மணி முருகன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
இதில் உறவின்முறை நிர்வாகிகள், தலைமையாசிரியர் ஆனந்தராஜ், ஆசிரியர்-ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்ட நிகழ்வில் பள்ளி செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ஜெயவேல் பாண்டியன் உறவின்முறை செயலாளர் முத்துசாமி, முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.