சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வேல்முருகனை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி நூர்சாகிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவரும், இவரது உறவிரனான 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அப்போது 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். வேல்முருகன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் நெருங்கி பழகினார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து வேல்முருகனும், அந்த சிறுமியின் மம்சாபுரத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்த தகவல் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வேல்முருகனை கைது செய்தனர்.