உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2022-07-18 08:42 GMT   |   Update On 2022-07-18 08:42 GMT
  • ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
  • பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜபாளையம்

ராஜபாளையம் சம்மந்தபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30),பால் வியாபாரி. இவரது மனைவி சந்தானேஸ்வரி. இவர்களுக்கு 3 வயதில் மகன், ஒரு வயதில் மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று லட்சுமணன் வழக்கம்போல் வியாபாரத்திற்கு ெசன்று விட்டார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது சந்தானேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் மனைவி, குழந்தைகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து லட்சுமணன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது மனைவி மற்றும் குழந்தைகளை பக்கத்து வீட்டை சேர்ந்த காளிராஜ் என்பவர் கடத்தி சென்றி ருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளார்.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News