உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-07-26 07:33 GMT   |   Update On 2023-07-26 07:33 GMT
  • ராஜபாளையத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் சுப்பிர மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிர மணியம். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 38). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஆவுடையம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் மன நல பாதிப்பும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத் தன்று ஆவுடையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

ஆபத் தான நிலையில் பாளையங் கோட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடை யம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News