உள்ளூர் செய்திகள்

உலக நுகர்வோர் உரிமை தினம்

Published On 2023-03-29 13:14 IST   |   Update On 2023-03-29 13:14:00 IST
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டது.
  • திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நுகர்வோர் சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டது. முதுகலை வணிகவியல் துறை இணைப்பேராசிரியர்-கல்லூரி நுகர்வோர் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது காலாவதியான தேதி மற்றும் அதிகபட்ச விலையை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.இதில் 210 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த மாணவி பிஸ்மி பாத்திமா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இணைப்பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News