என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Consumer Rights Day"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டது.
    • திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நுகர்வோர் சங்கத்தின் சார்பில் உலக நுகர்வோர் உரிமை தினம் கொண்டாடப்பட்டது. முதுகலை வணிகவியல் துறை இணைப்பேராசிரியர்-கல்லூரி நுகர்வோர் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில், நுகர்வோர் பொருட்களை வாங்கும் போது காலாவதியான தேதி மற்றும் அதிகபட்ச விலையை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றார்.இதில் 210 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த மாணவி பிஸ்மி பாத்திமா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இணைப்பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் செய்திருந்தார்.

    • திண்டுக்கல் மாவட்ட த்தில், மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நாளை நடைபெறுகிறது.
    • இவ்விழாவில் ஐ.பெரியசாமி உள்பட 3 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட த்தில், மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நாளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவு த்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் - தாடிக்கொம்பு சாலையில் உள்ள பி.வி.கே. மஹாலில் நடைபெறவுள்ளது.

    மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் மாநில நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து அரசு துறைகள் சார்பான தெளிவுரைகள் அமைச்சர்கள், நீதிசார் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற வுள்ளன.

    மாநில அளவில் நடை பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது. மேலும் சிறப்பாக பணி புரிந்த ரேசன் கடை விற்பனையாளர்கள், எடை யாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். அனைத்து அரசு துறைகள் சார்பாக துறைவாரியான கண்காட்சிகள் அமைக்கப்ப டவுள்ளன.

    எனவே நுகர்வோர், நுகர்வோர்களின் உரிமை கள் குறித்தும் மற்றும் அனைத்து அரசு துறைகளில் உள்ள நலப்பணிகள் குறித்து ம் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இவ்விழாவில் கலந்து க்கொண்டு பயன்பெ றலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    ×