உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு

Published On 2022-07-04 08:06 GMT   |   Update On 2022-07-04 08:06 GMT
  • விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
  • வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரியாபட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள சம்மனேந்தல் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

வீரசோழன் அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி ரகுராமன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரகுராமன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ரகுராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய கண்ணனை அந்தப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News