உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மர்மச்சாவு

Published On 2022-06-21 09:00 GMT   |   Update On 2022-06-21 09:00 GMT
  • மனைவியை பிரிந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக 7 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று பசும்பொன் தெருவில் உள்ள அவரது வீட்டில் செல்வகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வத்திராயிருப்பு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News