உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மர்மச்சாவு

Published On 2023-05-29 07:13 GMT   |   Update On 2023-05-29 07:13 GMT
  • தொழிலாளி மர்மமாக இறந்தார்.
  • லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகன் லூர்துராஜ்(வயது36). அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது முதல் மனைவி சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார். இதை யடுத்து லூர்துராஜ், பிரியங்கா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் லூர்து ராஜ் மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதில் பிரியங்கா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று லூர்து ராஜ் அதே பகுதியில் உள்ள ரோட்டில் கை, கால்களில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து லூர்துராஜ் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News