உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-04-29 08:08 GMT   |   Update On 2023-04-29 08:08 GMT
  • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தர பாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 40). இவரது மனைவி விஜி (39). இவர்கள் இருவரும் விறகு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவரது மகன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் கடந்த 4 நாட்களாக மழை காரணமாக முத்துசெல்வம் வேலைக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் விஜி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News