உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளர் சஸ்பெண்டு

Published On 2023-03-19 08:45 GMT   |   Update On 2023-03-19 08:45 GMT
  • கிராம நிர்வாக அதிகாரி- உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
  • 1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் மதன்குமார். உதவியாளராக இருப்பவர் கருப்பையா. இவர்களது அலுவலகத்துக்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதன் அடிப்படையில் இதுகுறித்து விசாரணை நடத்திய சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா இவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News