உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்

Published On 2023-06-01 08:24 GMT   |   Update On 2023-06-01 08:24 GMT
  • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடைத்தன.
  • இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக கஞ்சம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கணபதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து சாத்தூர் தாலுகா போலீசில் கணபதி புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு நிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்த அந்த நிலத்தின் உரிமையாளர் இ.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மணிமேகலாவுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கிராம உதவியாளர் மாரீஸ்வரியுடன் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலா விசாரித்தார். அதில் இறந்தவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News